Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
குமபகோணம்: கும்பகோணத்தில் ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்துள்ள மத்திய அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு, கீழ்மை நீதிமன்றங்களுக்கும், அனைத்திந்திய அளவில் நீதித்துறை தேர்வு என்ற திட்டத்தினை மத்தியஅரசு முன் வைத்துள்ளது. இந்த திட்டத்தினால் மாநில அரசின் சுயாட்சி பறிபோகும், குந்தகம் ஏற்படும்,
நீதித்துறையில் அனைத்திந்திய அளவில் தேர்வு நடத்தி இந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்தவர்கள், தமிழகத்திலுள்ள நீதிமன்றங்களில் நீதிபதிகளாக பதவியேற்கும் நிலை உள்ளது. ஆர்எஸ்எஸ் போன்ற மதம் சார்பு கொண்டவர்களுக்கு நீதிபதிகளாக ஆக்குவதற்கு மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கும், நீதித்துறைக்கும் பெரியகேடாக அமையும்.
எனவே மத்திய அரசின் இத்தகைய போக்கினை கண்டித்து நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர் சசிகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட வழக்கறிஞர்கள் அணி மாவட்ட அமைப்பாளர் விஜயகுமார், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் நிர்வாகி கருணாமூர்த்தி, நிர்வாகிகள் வெங்கடேஷ்பாபு, பாரதிராஜா,ஆனந்த்,அய்யப்பன் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்